Wednesday 20 February 2013

பிரிந்தும்..பிரியாமலே...



பிரியமானவனே.....
உன்னால் தூக்கத்தைத் 
தொலைத்தேன்.......
துக்கம் அனுமதியில்லாமலேயே,
என்னை அரவணைத்துவிட்டது....

உன்னால் சுகங்களை
இழந்தேன்.......
சோகங்கள் உரிமையுடன்
என் இதயத்தில் வாசம் செய்கின்றன...

உன் காலடியே சரணம்
என்றிருந்தேன்.....
மரணம் தான் என் வேதனைக்கு
முற்றுப்புள்ளி என்று,

சொல்லாமல் காட்டிவிட்டாய்.....
பிரியமானவனே........
பிரியாத வரம் கேட்டேன்....
புரியாதவன் போல்
பிரிந்து விட்டாயடா.........!!!

No comments:

Post a Comment